Sunday, April 23, 2017

9. அறிவு தருவார். 10. அநுக்கிரகம், அநுகூலம்.

9.  அறிவு தருவார்.

1.  கர்த்தர் ஞானத்தை தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.  (நீதி 2:6)

2.  ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்.  (நீதி 2:10)

3.  அப்போது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக் கொள்ளும்.  (நீதி 5:2)

4.  ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம் பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.  (நீதி 8:12)

5.  கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.  (நீதி 9:10)

6.  நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.  (சங் 147:5)

7.  தேவன் தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு ஞானத்தையும், அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்.  (பிர 2:26)

8.  ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் தங்கியிருப்பார்.  (ஏசா 11:2)

9.  சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல். பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.  (ஏசா 11:9)

10.  கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.  (2. கொரி 2:14)

10.  அநுக்கிரகம், அநுகூலம்.

1.  தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு.  (ஆதி 33:11)

2.  அநுகிரக காலத்திலே நான் உமக்குச் செவி கொடுத்து, இரட்சணிய நாளிலே உனக்கு உதவி செய்தேன்.  (ஏசா 49:8)

3.  அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.  (பிர 3:13)

4.  தேவன் ஐசுவரியத்தையும், சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ; அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.  (பிர 5:19)

5.  பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின் படியே, நீங்கள் ஏக சிந்தையுள்ளவர்களாய் இருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாராக.  (ரோமர் 15:6)

6.  தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள் வரைக்கும்  சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சி கூறி வருகிறேன்.  (அப் 26:22)

7.  கர்த்தாவே நீர் எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞகர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமான ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.  (சங் 86:17)

8.  உமது அடியேனுக்கு அநுகூலமாயிரும்;  அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக் கொள்ளுவேன்.  (சங் 119:17)

9.  இங்கே பெரிதும் அநுகூலமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது.  (1 கொரி 16:9)

10.  சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ் செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...