எபேசியர் 3:14-19. பவுல் ஜெபித்த ஜெபம்.
"நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழு குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால் படியிட்டு, மன்றாடுகிறேன்.
நாங்கள் கிறிஸ்துவினுடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து எங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நாங்கள் அன்பிலே வேரூன்றி. நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீழமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தினாலும் நிறையப்படவும், நீர் உம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின் படியே எங்களுக்கு அநுக்கிரகம் பண்ண வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்."
No comments:
Post a Comment