பிள்ளைகளின் ஆசீர்வாதம்....பெற்றோரின் அறிக்கை.
1. நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம். (ஏசா 8:18)
2. என் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். (ஏசா 54:13)
3. இதோ என் பிள்ளைகள் கர்த்தராரல் வந்த சுதந்திரம்; என் கர்ப்பத்தின் கனி அவரால் எனக்குக் கிடைத்த பலன். (சங் 127:4)
4. என் பிள்ளைகள் என் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக்கன்றுகளைப் போல இருக்கிறார்கள். (சங் 128:3)
5. என் சந்ததியின் மேல் கர்த்தருடைய ஆவியும், என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதங்களும் ஊற்றப்படும். அதனால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஒரத்தில் உள்ள அலரிச் செடிகளைப் போல் வளருவார்கள். (ஏசா 44:3,4)
6. என் மேல் இருக்கும் தேவ ஆவியும், என் வாயில் அவர் வைத்துள்ள அவர் வார்த்தைகளும் என் வாயினின்றும் என் சந்ததியின் வாயினின்றும் வழி வழி வரும் என் தலைமுறையினர் வாயினின்றும் நீங்குவதில்லை. (ஏசா 59:21)
7. என் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வார்கள். அவர்கள் சந்ததி கர்த்தருக்கு முன்பாக நிலைத்திருக்கும். (சங் 102:28)
8. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்து வாழும் என் மேலும் அவருடைய நீதி என் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றும் இருக்கும். (சங் 103:17)
9. கர்த்தர் என் வாசல்களின் தாழ்பாள்களைப் பெலப்படுத்தி என்னிடத்திலுள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். (சங் 147:13)
10. கர்த்தருக்கு பயந்து வாழும் எனக்கு திடநம்பிக்கை உண்டு. என் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். (நீதி 14:26)
11. என் பிள்ளைகளின் பிள்ளைகள் எனக்கு கிரீடமாய் விளங்குவார்கள். (நீதி 17:6)
12. நான் உத்தமத்திலே நடப்பேன். எனக்குப் பிறகு என் பிள்ளைகளும் பாக்கியவான்களாய் இருப்பார்கள். (நீதி 20:6)
13. என் சந்ததியானது பிற இனத்தாரிடையேயும், அவர்களது வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள். அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததி என ஏற்றுக் கொள்வார்கள். (ஏசா 61:9)
14. இயேசுவைப் போல என் பிள்ளைகள் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைவார்கள். (லூக்கா 2:52)
15. சாமுவேலைப் போல என் பிள்ளைகள் கர்த்தருக்கும், மனிதருக்கும் பிரியமாய் நடந்து கொள்வார்கள். (1 சாமு 2:26)
16. யோவான் ஸ்நானகனைப் போல் என் பிள்ளைகள் ஆவியில் பெலன் கொண்டு வளருவார்கள். இயேசுவின் இரத்தத்தினால் உண்டாகும் பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பை தெரியப் படுத்துவார்கள். (லூக்கா 1:80)
17. என் பிள்ளைகள் தானியேலைப் போல உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இடைவிடாமல் தேவனை ஆராதிப்பார்கள். தேவன் பேரில் விசுவாசம் வைப்பார்கள். அவர்கள் காரியம் ஜெயமாயிருக்கும். (தானி 6:4,16,23,28)
18. என் குமாரரும், என் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். தரிசனங்களைக் காண்பார்கள்.
No comments:
Post a Comment