Sunday, April 23, 2017

3. அரணாணவர். 4. பெலனானவர்.

3.  அரணாணவர்.

1.  தேவன் எனக்குப் பலத்த அரணாணவர்.  அவர் என் வழியைச்  செவ்வைப்படுத்துகிறவர்.  (2 சாமு 22:33)

2.  கர்த்தர் நல்லவர்.  இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.  (நாகூம் 1:7)

3.  நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்;  இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்குத் தருவேன்.  (கரியா 9:12)

4.  அவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான்;  கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர்அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.  (ஏசா 33:16)

5.  அக்காலத்திலே யூதா தேசத்தில் பாடப்படும் பாட்டாவது;  பெலனான நகரம் நமக்கு உண்டு;  இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.  (ஏசா 26:1)

6.  அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.  (சங் 31:4)

7.  கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.  (நீதி 10:29)

8.  நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.  (ஏரே 6:27)

9.  மந்தையின் துருகமே சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரீகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும்.  (மீகா 4:8)

10.  என் அரணாகிய தேவன் நீர்;  சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரிய வேண்டும்? (சங் 43:2)

இரட்சிப்பின் தேவனே - ஸ்தோத்திரம்.
என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பின் கன்மலையே - ஸ்தோத்திரம்.
என் இரட்சிப்புமானவரே - ஸ்தோத்திரம்.
என் இரட்சிப்பின் பெலனே - ஸ்தோத்திரம்.
பரலோககத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் - ஸ்தோத்திரம்.
எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் - ஸ்தோத்திரம்.
இரட்சிக்கும் உமது வலது கரத்துக்காக, ஒங்கிய புயத்துக்காக - ஸ்தோத்திரம்.
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறீர் - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பென்னும் சீராவை சிரசில் தரித்திருப்பவரே (ஏசா 59:17) - ஸ்தோத்திரம்.
இரட்சிப்பு கர்த்தருடையது - ஸ்தோத்திரம்.
எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே
என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே

4.  பெலனானவர்.

1.  என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப் படுத்துகிறவர் தேவனே.  (சங் 18:32)

2.  சோர்ந்து போகிறவனுக்குப் அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.  (ஏசா 40:29)

3.  யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என் மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப் பண்ணினீர்.  (சங் 18:39)

4.  கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.  (சங் 29:11)

5.  தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.  (சங் 46:1)

6.  என் பெலனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்; தேவன் எனக்கு அடைக்கலமும், கிருபையுமுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.  (சங் 59:17)

7.  கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களி கூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.  (சங் 28:7)

8.  கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப் பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஒடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.  (ஏசா 40:31)

9.  ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்.  (அப 3:19)

10.  பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.  (எபி 11:34)

வல்லமையுள்ள கர்த்தரே
எல்ஷடாய் சர்வ (வல்லமையுள்ளவர்)
வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு
தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறவரே
இஸ்ரவேலின் வல்லவரே
யாக்கோபின் வல்லவரே
சகலத்தையும் தம் வல்லமையுள்ள வசனத்தினால் தாங்குகிறவரே
யுத்தத்தில் வல்லவரே

என்பெலனாகிய கன்மலையே
என் பெலனும் என் கீதமுமானவரே
என் ஜீவனின் பெலனானவரே
என் இரட்சிப்பின் பெலனே
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவே
இஸ்ரவேலின் ஜெயபலமானவரே
ஐசுவரியத்தைச் சம்பாதிக்க பெலனைக் கொடுப்பவரே
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு தப்புவிக்கிறவரே
பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும் லேசாக உதவி செய்கிறவரே
கொடுமையானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப் போல் இருக்கையில் எழைக்குப் பெலனானவரே
என்னை பெலத்தால் இடை கட்டுகிறவரே
தேவன் எனக்கு பலத்தைக் கட்டளையிட்டதுக்காக

என் ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...