1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள்.
2. ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள்.
3. வேத வாசிப்பு: சங் - 91: 1-16: சங் - 50: 10-15
சங்கீதம் 50:10-15 - 10. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11. மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
12. நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
13. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14. நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
2 கொரி 10:4.- 4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளா யிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளா யிருக்கிறது.
பிலி 4:19.- 19. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.…
Phil 4:19: என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் குறைவை யெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.…
1. ஒவ்வொரு நாளும் உயிருள்ள கர்த்தருடைய நெருப்புத்தூண் எனக்கு முன்பாகச் சென்று என் பாதைகளை ஆண்டவர் இயேசுவின் வல்லமையான பெயராலே வெளிச்சமாக்கக் கடவது
2. பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய அக்கினியும், ஆட்டுக்குட்டியானவரின் இரத்தமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் இருதயத்தை சுத்தமாக்கும், வெளிச்சமாக்கும்.
3. பரிசுத்த ஆவியானவரே, ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால், கிறிஸ்துவின் அன்பு என் இருதயத்தை கொழுந்து விட்டு எரிய செய்யட்டும்.
கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார்; நான் அமர்ந்திருந்தால் போதும்.
4. கர்த்தாவே, ஆவியானவரின் வரங்கள், கனிகள் எனது வாழ்க்கையில் இயேசுவின் நாமத்தில் புது வல்லமையான வழியில் தோன்றுவதாக.
5. என் இருதயத்தில் பலமாய் ஆட்கொண்டிருக்கும் எந்த விக்கிரகமும், இயேசுவின் நாமத்தினால், கர்த்தரின் அக்கினி எடுத்து கீழே போட்டு அழிப்பதாக.
6. கர்த்தாவே, உம்முடைய வார்த்தையாகிய ஞானம் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக இயேசுவின் பெயராலே, எனக்கு வருவதாக.
7. கர்த்தாவே தீர்க்க தரிசன வரத்தை தூய ஆவியானவர் மூலமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனக்கு அருளிச் செய்யும்.
8. கர்த்தாவே, உணர்வுள்ள ஆவியை, பகுத்தரியும் ஆவியின் வரத்தை இயேசுவின் நாமத்தில் எனக்கு அருளிச் செய்யும்.
9. கர்த்தாவே, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், இயேசுவின் சரீரத்தை உயர்த்தவும், வரங்களை இயேசுவின் பெயரால் பயன் படுத்த உதவும்.
10. ஆண்டவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஜீவனின் ஆவி, - எனது ஜெபபீடம், - வாழ்க்கை, கனவு, - திருமணம், - அழைப்பு, - என் சரீரத்தின் எல்லா உருப்புகளிலும் உயிறூட்டம் கொடுத்துள்ளது.
11 ஆவியில் இயேசுவைக் காண்பதைத் தடைச் செய்யும் சாத்தானின் எல்லாத் தடைகளும், கர்த்தரின் அக்கினி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அழித்துப் போடுவதாக.
12 என் ஆவியின் கண்களை மறைக்க வீசப்படும், பலவான்களின் மறைப்பு, இயேசுவின் நாமத்தில் கர்த்தரின் அக்கினியால் சுட்டெரிக்கப் படுவதாக.
13. உயிருள்ள தேவனின் ஆவி, எனது ஆவியின் கண்களை, இயேசுவின் நாமத்தில் திறப்பாராக.
14. கர்த்தாவே, என் செவிகள் உமது சத்தத்தைக் கேட்க, இயேசுவின் நாமத்தில் திறக்கப்படுவதாக.
15. கர்த்தாவே, எனது வாழ்க்கையில் உமது உயர்வு உண்டாக்கும் அபிஷேகத்தை, இயேசுவின் பெயராலே கட்டவிழ்த்து விடும்.
16. இயேசுவின் நாமத்தில், கர்த்தர் என்னை வாலாக்காமல் தலையாக்குவார், கீழாக்காமல் மேலாக்குவார் என்று எமுதியிருக்கிறதே.
17. குறைவின் ஆவியே, இயேசுவின் பெயராலே என் வாழ்க்கையிலிருந்து உன் பிடியை எடு.
18. உலக வாழ்க்கையில் மூழ்கி விடாமல் இருக்க இயேசுவின் பெயராலே ஜெபிக்கிறேன்.
19. வெட்கப்படுத்தும் எல்லா சூழ்நிலைகளையும் இயேசுவின் நாமத்தில் செயலிழக்கச் செய்கிறேன்.
20. என்னை கீழ் நிலைக்கு கொண்டு செல்ல அழைக்கும் சப்தம், இயேசுவின் தூய இரத்தத்தினால் செயலிழப்பதாக.
21. மேன்மையான என் இடத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ் வல்லமையும், கீழே தள்ளப்பட்டு இயேசுவின் நாமத்தினால் சுட்டெரிக்கப் படுவதாக.
22. நான் கால் மிதிக்கும் இடமெல்லாம், இயேசுவின் பெயரால் எனக்குச் சொந்தமாவதாக.
23. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலே, சாத்தானின் போட்டியிடும் தன்மை செயலிழப்பதாக.
24. உயர்வான செயல்கள், மகிமையான காலம், என் வாழ்வில் இயேசுவின் பெயரால் தோன்றுவதாக.
25. கர்த்தருக்கு எதிராக உயர்த்தி புகழ்ந்து பேசும் கோலியாத் மற்றும் பார்வோனின் ஆவி, இயேசுவின் பெயராலே கட்டப்பட்டு அக்கினி நதிக்குள் செல்வதாக.
26. எனது வாழ்க்கைக்கு, வாழ்க்கையின் நோக்கத்திற்கு எதிரான சாத்தானின் எதிர்பார்ப்புகள், இயேசுவின் பெயரால் ஏமாற்றம் அடைவதாக.
27. எனக்கு எதிரான விரோதிகளின் சக்திகள் மேல், இயேசுவின் நாமத்தில் கர்த்தரின் வல்லமை இறங்குவதாக.
28. என்னிடத்திலிருந்து கனவில் திருடப்பட்டவைகளை இயேசுவின் பெயரால் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
29. செழிப்பை அடைய விடாமல் என் கைகளைக் கட்டி வைத்திருக்கும் சாத்தானின் சங்கிலிகள் இயேசுவின் பரிசுத்தமான பெயரால் பற்றி எரிந்து சாம்பலாக போவதாக.
30. என்னை பின்மாற்றத்திற்கு இழுக்கும் படி என் கழுத்தைக் கட்டி இழுக்கும் சாத்தானின் சங்கிலிகள் இயேசுவின் வல்லமையான நாமத்தினால் தீ பற்றி எரிந்து சாம்பலாவதாக.
31. என்னை கீழே இழுக்கும் படி என் கைகளின் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ள சாத்தானின் சங்கிலிகள் இயேசுவின் வல்லமையான நாமத்தினால் தீ பற்றி எரிந்து சாம்பலாவதாக.
32. முன்னோக்கிச் செல்லமுடியாதபடி கால்களைக் கட்டி இழுக்கும் சாத்தானின் சங்கிலிகள் அறுபட்டு எரிந்து இயேசுவின் நாமத்தில் சாம்பலாவதாக.
33. தோல்வி என்னும் வட்டத்தை விட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலுள்ள வல்லமையினால் குதித்து வெளியே வருவேன்.
34. எனது வாழ்க்கையிலுள்ள தோல்வியின் விதைகள் இயேசுவின் நாமத்தில், கடவுளின் அக்கினிக்கு தீக்கிரையாகட்டும்.
35. என் வாழ்வில் நடப்பட்டுள்ள சாதிக்க முடியாது என்ற ஒவ்வொரு மரங்களும் இயேசுவின் நாமத்தில் வேரருக்கப்பட்டுப் போவதாக.
36. சாத்தானின் நங்கூரங்கள் என் கரங்கள், கால்கள் இவற்றில் போடப்பட்டிருப்பின் இயேசுவின் வல்லமையுள்ள பெயரால் நீங்கிப் போவதாக.
37. இப்பொழுது நான் இருக்கும் இடத்திலிருந்து கர்த்தர், நான் போக விரும்பும் இடத்திற்கு, இயேசுவின் இரத்தத்தில் உள்ள வல்லமையால், செல்ல உதவி செய்வாராக.
38. சாதிக்க முடியாது என்ற சாபக் கட்டுகளை இயேசுவின் பெயரால், உடைத்துப் போடுகிறேன்.
39. கனவில் வரத் துவங்கும் சாத்தானின் செயல்கள், இயேசுவின் இரத்தத்தால் நீங்கி ஒன்றுமில்லாமல் போவதாக.
40. கர்த்தரின் நன்மையையும், கிருபையையும், குறித்து இயேசுவின் நாமத்தில் பாடுவேன்.