Tuesday, May 28, 2024

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.




1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள்.
2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள்.
3. வேத வாசிப்பு: சங் - 91: 1-16:  சங் - 50: 10-15

சங்கீதம் 50:10-15 -  10. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.

11. மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

12. நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

13. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

14. நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

2 கொரி 10:4.-  4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளா யிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளா யிருக்கிறது.

பிலி 4:19.- 19.  என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.…
Phil 4:19: என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் குறைவை யெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.…

1. ஒவ்வொரு நாளும் உயிருள்ள கர்த்தருடைய நெருப்புத்தூண் எனக்கு முன்பாகச் சென்று என் பாதைகளை ஆண்டவர் இயேசுவின் வல்லமையான பெயராலே வெளிச்சமாக்கக் கடவது
2. பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய அக்கினியும், ஆட்டுக்குட்டியானவரின் இரத்தமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் இருதயத்தை சுத்தமாக்கும்,  வெளிச்சமாக்கும்.
3. பரிசுத்த ஆவியானவரே, ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால், கிறிஸ்துவின் அன்பு  என் இருதயத்தை கொழுந்து விட்டு எரிய செய்யட்டும்.
கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார்; நான் அமர்ந்திருந்தால் போதும்.
4. கர்த்தாவே, ஆவியானவரின் வரங்கள், கனிகள் எனது வாழ்க்கையில் இயேசுவின் நாமத்தில் புது வல்லமையான வழியில் தோன்றுவதாக.
5. என் இருதயத்தில் பலமாய் ஆட்கொண்டிருக்கும் எந்த விக்கிரகமும், இயேசுவின் நாமத்தினால்,  கர்த்தரின் அக்கினி எடுத்து கீழே போட்டு அழிப்பதாக.
6. கர்த்தாவே, உம்முடைய வார்த்தையாகிய ஞானம் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக இயேசுவின் பெயராலே, எனக்கு வருவதாக.
7. கர்த்தாவே தீர்க்க தரிசன வரத்தை தூய ஆவியானவர் மூலமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனக்கு அருளிச் செய்யும்.
8. கர்த்தாவே, உணர்வுள்ள ஆவியை, பகுத்தரியும் ஆவியின் வரத்தை இயேசுவின் நாமத்தில் எனக்கு அருளிச் செய்யும்.  
9.  கர்த்தாவே, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவும், இயேசுவின் சரீரத்தை உயர்த்தவும், வரங்களை இயேசுவின் பெயரால் பயன் படுத்த உதவும்.  
10. ஆண்டவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஜீவனின்  ஆவி, - எனது ஜெபபீடம், - வாழ்க்கை, கனவு, - திருமணம், - அழைப்பு, - என் சரீரத்தின் எல்லா உருப்புகளிலும் உயிறூட்டம் கொடுத்துள்ளது.
11  ஆவியில் இயேசுவைக் காண்பதைத் தடைச் செய்யும் சாத்தானின் எல்லாத் தடைகளும், கர்த்தரின் அக்கினி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அழித்துப் போடுவதாக.  
12  என் ஆவியின் கண்களை மறைக்க வீசப்படும், பலவான்களின் மறைப்பு, இயேசுவின் நாமத்தில் கர்த்தரின் அக்கினியால் சுட்டெரிக்கப் படுவதாக.  
13. உயிருள்ள தேவனின் ஆவி, எனது ஆவியின் கண்களை, இயேசுவின்  நாமத்தில் திறப்பாராக.
14. கர்த்தாவே, என் செவிகள் உமது சத்தத்தைக் கேட்க, இயேசுவின் நாமத்தில் திறக்கப்படுவதாக.
15. கர்த்தாவே, எனது வாழ்க்கையில் உமது உயர்வு உண்டாக்கும் அபிஷேகத்தை, இயேசுவின் பெயராலே கட்டவிழ்த்து விடும்.  
16. இயேசுவின் நாமத்தில், கர்த்தர் என்னை வாலாக்காமல் தலையாக்குவார், கீழாக்காமல் மேலாக்குவார் என்று எமுதியிருக்கிறதே.  
17. குறைவின் ஆவியே, இயேசுவின் பெயராலே என் வாழ்க்கையிலிருந்து உன் பிடியை எடு.
18. உலக வாழ்க்கையில் மூழ்கி விடாமல் இருக்க இயேசுவின் பெயராலே ஜெபிக்கிறேன்.
19. வெட்கப்படுத்தும் எல்லா சூழ்நிலைகளையும் இயேசுவின் நாமத்தில் செயலிழக்கச் செய்கிறேன்.   

20. என்னை கீழ் நிலைக்கு கொண்டு செல்ல அழைக்கும் சப்தம், இயேசுவின் தூய இரத்தத்தினால் செயலிழப்பதாக.
21. மேன்மையான என் இடத்தில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு  ் வல்லமையும், கீழே தள்ளப்பட்டு இயேசுவின் நாமத்தினால் சுட்டெரிக்கப் படுவதாக.  
22. நான் கால் மிதிக்கும் இடமெல்லாம், இயேசுவின் பெயரால் எனக்குச் சொந்தமாவதாக.
23. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலே, சாத்தானின் போட்டியிடும் தன்மை செயலிழப்பதாக.
24. உயர்வான செயல்கள், மகிமையான காலம்,  என் வாழ்வில் இயேசுவின் பெயரால் தோன்றுவதாக.
25. கர்த்தருக்கு எதிராக உயர்த்தி புகழ்ந்து பேசும் கோலியாத் மற்றும் பார்வோனின் ஆவி, இயேசுவின் பெயராலே கட்டப்பட்டு அக்கினி நதிக்குள் செல்வதாக.
26. எனது வாழ்க்கைக்கு, வாழ்க்கையின் நோக்கத்திற்கு எதிரான சாத்தானின் எதிர்பார்ப்புகள், இயேசுவின் பெயரால் ஏமாற்றம் அடைவதாக.
27. எனக்கு எதிரான விரோதிகளின் சக்திகள் மேல், இயேசுவின் நாமத்தில் கர்த்தரின் வல்லமை இறங்குவதாக.  
28. என்னிடத்திலிருந்து கனவில் திருடப்பட்டவைகளை இயேசுவின் பெயரால் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.  
29. செழிப்பை அடைய விடாமல் என் கைகளைக் கட்டி வைத்திருக்கும் சாத்தானின் சங்கிலிகள் இயேசுவின் பரிசுத்தமான பெயரால் பற்றி எரிந்து சாம்பலாக போவதாக.
30. என்னை பின்மாற்றத்திற்கு இழுக்கும் படி என் கழுத்தைக் கட்டி இழுக்கும் சாத்தானின் சங்கிலிகள் இயேசுவின் வல்லமையான நாமத்தினால் தீ பற்றி எரிந்து சாம்பலாவதாக.
31. என்னை கீழே இழுக்கும் படி என் கைகளின் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ள சாத்தானின் சங்கிலிகள்  இயேசுவின் வல்லமையான நாமத்தினால் தீ பற்றி எரிந்து சாம்பலாவதாக.  
32. முன்னோக்கிச் செல்லமுடியாதபடி கால்களைக் கட்டி இழுக்கும் சாத்தானின் சங்கிலிகள் அறுபட்டு எரிந்து இயேசுவின் நாமத்தில் சாம்பலாவதாக.  
33. தோல்வி என்னும் வட்டத்தை விட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலுள்ள வல்லமையினால் குதித்து வெளியே வருவேன்.
34.  எனது வாழ்க்கையிலுள்ள தோல்வியின் விதைகள் இயேசுவின் நாமத்தில், கடவுளின் அக்கினிக்கு தீக்கிரையாகட்டும்.
35. என்  வாழ்வில் நடப்பட்டுள்ள சாதிக்க முடியாது என்ற ஒவ்வொரு மரங்களும் இயேசுவின் நாமத்தில் வேரருக்கப்பட்டுப் போவதாக.
36. சாத்தானின் நங்கூரங்கள் என் கரங்கள், கால்கள் இவற்றில் போடப்பட்டிருப்பின் இயேசுவின் வல்லமையுள்ள பெயரால் நீங்கிப் போவதாக.
37. இப்பொழுது நான் இருக்கும் இடத்திலிருந்து கர்த்தர், நான் போக விரும்பும் இடத்திற்கு, இயேசுவின் இரத்தத்தில் உள்ள வல்லமையால், செல்ல உதவி செய்வாராக.
38.   சாதிக்க முடியாது என்ற சாபக் கட்டுகளை இயேசுவின் பெயரால், உடைத்துப் போடுகிறேன்.
39. கனவில் வரத் துவங்கும் சாத்தானின் செயல்கள், இயேசுவின் இரத்தத்தால் நீங்கி ஒன்றுமில்லாமல் போவதாக.
40.  கர்த்தரின் நன்மையையும், கிருபையையும், குறித்து இயேசுவின் நாமத்தில் பாடுவேன்.  

FOR COMFORT AND STRENGTH

FOR COMFORT AND STRENGTH

1. “என்னுடைய இருதயத்தில் கருவாகி நாவால் உருப்பெற்று வாயால் பேசப்படும் தேவனுடைய வார்த்தையானது என்னிலுள்ள தேவனுடைய திறனை வெளியாக்கும் ஆவிக்குரிய பெரும் சக்தியா யிருக்கிறது. “

2. “நான் தேவனைப் பற்றிய அறிவில் விருத்தி யடைகிறேன். மகிமையான அவருடைய வல்லமையின் படி, அவருடைய எல்லா வல்லமையாலும் பெலப்படுத்தப் படுகிறென். “

3. “இருளின் அதிகாரத்தில் இருந்து நான் விடுதலையாகி, அவரது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்தப் பட்டு யிருக்கிறேன். “

4. “நான் தேவனால் பிறந்தவன். எனக்குள் உலகத்தை ஜெயிக்கிற விசுவாசம் உண்டு. ஏனென்றால் உலகத்திலுள்ளவனை விட என்னில் உள்ளவர் பெரியவர். “
5. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.”

6. “கர்த்தருக்குள் மகிழ்சியாய் இருப்பதே என் பெலன். கர்த்தர் என் ஜூவனின் பெலனானவர். “

7. “எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் என் இருதயத்தையும் சிந்தையையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளுகிறது.  நல்லவைகள் எவைகளோ, சுத்தமானவைகள் எவைகளோ, பூரணமானவைகள் எவைகளோ, அன்பானவைகள் எவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, அவைகளையே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். “

8. “அன்புடன் சத்தியத்தைக் கைக் கொண்டு கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் வளருகிறேன். “

9.  கெட்ட வார்த்தை யொன்றும் என் வாயிலிருந்து புறப்பட விடமாட்டேன்.  ஆனால் பக்திவிருத்திக்கேதுவான நல்ல வார்த்தைகளையே, கிருபையின் வார்த்தைகளையே பேசுவேன்.  நான் மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்த மாட்டேன்.

10.  எனக்கு நித்திய ஜீவனிருப்பதால், அவருடைய கரத்திலிருந்து என்னை யாரும் பிரிக்கமுடியாது.

11. தேவனுடைய சமாதானம் என் இருதயத்தை ஆளுகை செய்கிறது.  நான் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்.

12.  தேவனுடைய வார்த்தைகள் என் கண்களை விட்டுப் பிரிய விடமாட்டேன்.  ஏனென்றால் அவைகள் எனக்குச் ஜீவனும் என் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாய் இருக்கிறது.

13.  தேவன் என் பட்சத்திலிருக்கிறார்.  எனக்குள் இருக்கிறார்.  ஆகவே எனக்கு விரோதமாய் இருப்பவன் யார்?  அவர் எனது ஜீவனுக்கும், தேவபக்திக்கும் வேண்டிய யாவையும் எனக்கு கொடுத்திருக்கிறார்.  ஆகவே அவருடைய திவ்விய சுபாவத்தில் பங்குள்ளவனாக இருக்கிறேன்.

14.  இயேசு தமது நாமத்தைப் பயன்படுத்தும் படி எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.   நான் பூலோகத்தில் எதை தடை செய்கிறேனோ அது விண்ணுலகிலும் தடை செய்யப்படும்.  மண்ணுலகில் நான் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்.  
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர், ஆகியோரை தடைசெய்கிறேன்.  வான்வெளியிலுள்ள தீய ஆவிகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தடை செய்கிறேன்.  இவைகளை அப்புறப் படுத்துகிறேன்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவைகள் எங்களுக்கு விரோதமாய் ஒன்றும் செய்யாதபடி செய்கிறேன்.

15.  நான் ஒரு விசுவாசியாய்யிருப்பதால் இந்த அடையாளங்கள் என்னைப் பின் தொடரும்.  இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துறத்துவேன், அந்நிய பாஷைகளில் பேசுகிறேன், வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கிறேன் அவர்கள் சொஸ்தமாகிறார்கள்.

16.  எல்லா துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்காகவும், தலையான கிறிஸ்துவுக்குள் நான் பூரணமாயிருக்கிறேன்.  ஏனென்றால் நான் நற்கிரியைகளைச் செய்வதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறேன்.  அவைகளில் நான் நடக்கும் படி என்னை முன் குறித்திருக்கிறார்.

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...